Monday, December 7, 2015

சென்னை வெள்ளம் !

என்  மெய் சிலிர்கிறது!!!
மேனியெல்லாம் புள்ளரிகிறது !!!
மழையே நீ மண்டியிட்டு தோற்றுபோனாய்
மாண்புமிகு மனிதநேயதிடம் !!!

மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியதைவிட
மழைவெள்ளத்தில் சிக்கிய மனிதர்களைவிட
மீட்டு  எடுக்க ஓடோடி வந்த மக்கள், அல்ல
அலைஅலையாய் வந்த  மனித தெய்வங்கள் !

மனித அலையின் ஆர்பரிப்பு வேகத்திற்கு
ஈடுகொடுக்க இயலாத இயற்கையும்,
ஈவு இரக்கமின்றி கொட்டி தீர்த்த வானமும்
வாயடைத்து போனது !


திறண்டு வந்த வெள்ளத்தை பார்த்து,
இயற்கையை வெல்ல யாராலும் முடியாது -
என்று கூக்குரலிட்ட யாவரும் !-மறந்து
போனார்கள் அந்த வரியை !


கூடிவந்த கோடி கைகளை கண்டு,
மண்டி வந்த மனித சக்தியை பார்த்து,
மாண்டு போகவில்லை மனிதம் - என்று
மருண்டு ஓடியது வெள்ளம் ! மயங்கி நின்றது ஒரு கூட்டம் !

இதில்  சில கருப்பு ஆடுகளையும் -
இனம்  கண்டுகொண்டது மக்கள் உள்ளம் !